சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் விரேந்திரநகர் சுகாதார மையத்தில், பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில், அவருக்கு மேலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக வாட்ராஃப்நகரில் உள்ள மர்கவுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது முக்கிய சாலைகளில் இருந்து உள்ளே செல்வதற்கான சாலை மிக மோசமாக நிலையில் பழுதடைந்து இருந்தது.
இதையடுத்து, அப்பெண்ணையும், குழந்தையையும் 3 கிமீ தூரம் ஒரு கட்டிலில் படுக்க வைத்து தூக்கிச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் பல கிமீ தூரம் பிணத்தை தூக்கி செல்வது, உடல்நிலை சரியில்லாதவர்களை தூக்கி செல்லும் அவலங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
அதனால், அங்குள்ள சில பகுதிகளில் உட்கட்டமைப்பு, சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கு மேலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக வாட்ராஃப்நகரில் உள்ள மர்கவுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது முக்கிய சாலைகளில் இருந்து உள்ளே செல்வதற்கான சாலை மிக மோசமாக நிலையில் பழுதடைந்து இருந்தது.
இதையடுத்து, அப்பெண்ணையும், குழந்தையையும் 3 கிமீ தூரம் ஒரு கட்டிலில் படுக்க வைத்து தூக்கிச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் பல கிமீ தூரம் பிணத்தை தூக்கி செல்வது, உடல்நிலை சரியில்லாதவர்களை தூக்கி செல்லும் அவலங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
அதனால், அங்குள்ள சில பகுதிகளில் உட்கட்டமைப்பு, சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment